Thursday, July 23, 2009

முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் திடீர் சாலைமறியல்

முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் திடீர் சாலைமறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் தென்பகுதி தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் முத்துப்பேட்டையில் கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தேங்காய்க்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) துரைராஜ், வேளாண்மை இயக்குனர் கல்யாணசுந்தரம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் நாளை (இன்று) முத்துப் பேட்டையில் நடத்தப்படும் விவசாயிகள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும் தென்னை விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால், முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை - பட்டுக்கோட்டை பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment