Thursday, July 9, 2009

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட்

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க

முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட்

திருவாரூர் எஸ்பி பேட்டி

திருவாரூர், ஜூலை 9:
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடற்கரை பகுதியான முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது என்று திருவாரூர் மாவட்ட எஸ்பி பிரவீன் குமார் அபினபு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று காலை நிருபர்களிடம் கூறியது:
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தீவிர ரோந்து பணி நடைபெற்றுவருகிறது. இதையட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடற்கரையோர பகுதியான முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 18கி.மீ தூரம் வரை திருவாரூர் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டில் ஜாம்புவானோடை, கற்பகநாதர் குளம், தம்பிகோட்டை கீழக்காடு உள்ளிட்ட 7 ஊராட்சிகள் உள்ளன. இங்கு கோபால சமுத்திரம், தில்லைவிளாகம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை ஆகிய 4 இடங்களில் நிரந்தரமாக செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விளாங்காடு, கரையாங்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக 2 தற்காலிக செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்களில் கடற்கரையோரங்களில் ரோந்து பணி நடந்து வருகிறது. 9 பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு அனைத்து நவீன ரக ஆயுதங்கள் வழங்கப்பட்டு சிறப்பு அதிரடி படை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக திருவாரூர் மாவட்டத்துக்குள் நுழைய லகூனை கடந்து தான் வரவேண்டும். இங்கு கடல் மார்க்கமாக நுழைய வாய்ப்புகள் குறைவு. இப்பகுதியிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

From :
M.ABDUL MALIK ( SIA )
www.muthupetxpress.blogspot.com

No comments:

Post a Comment