Monday, July 20, 2009

முத்துப்பேட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 வாலிபர்கள் கைது

முத்துப்பேட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 வாலிபர்கள் கைது
டிராக்டர் பறிமுதல்

முத்துப்பேட்டை, ஜுலை.20-
முத்துப்பேட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மணல் திருடிய 4 பேர் கைது
திருத்துறைப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, ஏட்டுகள் மாரிமுத்து, ராஜேந்திரன், வில்பர்ட் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு முத்துப்பேட்டை கீழக்காடு பகுதியில் திடீர் சாராய வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பாமணி ஆற்றின் பாலத்தில் சிலர் அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்துவது தெரியவந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமு (வயது 28), பாக்கியராஜ் (27), உதயகுமார் (28), அய்யப்பன் (22) ஆகிய 4 பேரையும் பிடித்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
டிராக்டர் பறிமுதல்
மேலும், அவர்கள் பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரத்திடம் அவர்களை போலீசார் ஒப்படைத்தனர்.

- தினத்தந்தி
From :
M.ABDUL MALIK ( SIA )

www.muthupetxpress.blogspot.com

No comments:

Post a Comment