Sunday, June 7, 2009

துபாயில் வேலூர் எம்.பி. அப்துல் ர‌ஹ்மானுக்கு சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு




துபாய் ச‌ர்வ‌தேச‌ விமான‌ நிலைய‌ம் முனைய‌ம் 3ல் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராக‌ பொறுப்பேற்ற‌ பின்ன‌ர் முத‌ன் முறையாக‌ துபாய் வ‌ருகைபுரிந்த‌ எம். அப்துல் ர‌ஹ்மானுக்கு அமீர‌க‌ காயிதே மில்ல‌த் பேர‌வையின் சார்பில் வெள்ளிக்கிழ‌மை ந‌ள்ளிர‌வு மிக‌ச் சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சியில் அமீர‌க‌ காயிதே மில்லத் பேர‌வை துணைத்த‌லைவ‌ர் நூஹு சாஹிப், பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ.லியாக்க‌த் அலி, இணைச்செய‌லாள‌ர்க‌ள் ஹ‌மீதுர் ர‌ஹ்மான், ஹ‌மீது யாசின், பொருளாள‌ர் எம். அப்துல் க‌த்தீம், ஊட‌க‌த்துறை பொறுப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த், ஆம்பூர் ரியாஸ் அஹ்ம‌த், ஈமான் ச‌ங்க‌ நிர்வாகிக‌ள், முத்துப்பேட்டை அமீர‌க‌ப் பேர‌வை, திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின‌ர், தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் குழுவின‌ர்,ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத், துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம், யுஏஇ த‌மிழ்ச் ச‌ங்க‌ம், புர‌வ‌ல‌ர்க‌ள், உல‌மாப் பெரும‌க்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

த‌ன்னுடைய‌ வெற்றிக்காக‌ பிரார்த்தித்த‌ அனைத்து ந‌ல்லுங்க‌ளுக்கும் த‌ன‌து ந‌ன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் வேலூர் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான்.

No comments:

Post a Comment