Monday, April 13, 2009

ஆந்திரா லாட்ஜில் அடைத்து சென்னை பெண்ணை கற்பழித்த போலீஸ்காரர்

சென்னை, ஏப். 10- சென்னை யானை கவுனி ஜெனரல் முத்தையா முதலி தெருவை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 24). இவரது செல்போனுக்கு சில மாதங்களுக்கு முன்பு மிஸ்டு கால் ஒன்று வந்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் மதன்குமார் (27) என்பவர் பேசினார். அதன் மூலம் ஏற்பட்ட பழக்கம் நட்பானது. எல்லை பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணிபுரிவதாக கூறி பத்மாவதியிடம் நெருங்கி பழகினார். சில நாட்களுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட அழைத்து சென்றார். காளகஸ்தியில் உள்ள லாட்ஜில் பத்மாவதியை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தார். மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தார்.
அதை குடித்து பத்மாவதி மயங்கினார். அப்போது அவரை மதன்குமார் கற்பழித்தாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்வதாக கூறி சமாதானம் செய்தார். ஆனால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மதன்குமார் வீடு குரோம்பேட்டையில் உள்ளது. அவர் இங்கிருந்து காஷ்மீருக்கு சென்று விட்டார். எனவே மதன்குமார் மீது நடவடிக்கை எடுத்து அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பத்மாவதி பூக்கடை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment