Sunday, April 5, 2009

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் முத்துப்பேட்டையில் ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது

சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்

முத்துப்பேட்டையில் ஓட்டலை சூறையாடிய 3 வாலிபர்கள் கைது

முத்துப்பேட்டையில், சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ஓட்டலை அடித்து உடைத்து சூறையாடினர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை ஆசாத்நகரில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் முத்துமணி (வயது 38). நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு கன்னியா குறிச்சியைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார் (38), மேலநத்தம் கலைச்செல்வன் மகன் சரவணன் (23), பெருக வாழ்ந்தான் வீரையா தேவர் மகன் குமார் (29) மற்றும் அவர்களின் நண்பர்கள் 12 பேர் சாப்பிட வந்தனர்.

இவர்கள் அனைவரும் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது அருந்தி வந்துள்ளனர். அனைவரும் சாப்பிட்டு முடிந்தவுடன் முத்துமணி, சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் கடையில் வேலைபார்த்த ஊழியர்களை தாக்கினர். மேலும், கடையில் இருந்த பர்னிச்சர் பொருட்களையும், பாத்திரங்களையும் அடித்து உடைத்து சூறையாடி னர்.

3 வாலிபர்கள் கைது

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் முத்துமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து குமார், சரவணன், மற்றொரு குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 12 பேரையும் வலைவீசி தேடி வருகின்றார்கள்.

No comments:

Post a Comment