Wednesday, May 13, 2009

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன

நாளை பிளஸ் டூ முடிவுகள்

சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ் டூ தேர்வுகள் நடந்தன.

5,040 பள்ளிகளைச் சேர்ந்த 6,47,630 மாணவ, மாணவிகள் 1,738 மையங்களில் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 900 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் மாணவிகள். கடந்த ஆண்டைவிட 54 ஆயிரத்து 326 பேர் கூடுதலாக எழுதினார்கள்.

இந்தத் தேர்வு முடிவுகல் நாளை வெளியாகும் என பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி அறிவித்தார்.


தேர்வு முடிவுகளை நமது இணையதளத்தில் (swww.muthupet.org ) காணலாம் கொடுக்கப்பட்டுள்ள தழிழ் நாடு அரசு இணையத்தின் தொடர்பை சொடுக்கி நீங்கள் தேர்வு முடிவுகளை காணலாம்.


இந்தத் தேர்வு முடிவுகள் www.pallikalvi.in, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in, ஆகிய இணையத் தளங்களிலும் காணலாம்.

எஸ்எம்எஸ் மூலமும்..

இந்தத் தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். மூலமும் அறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன் இணையதளமான பள்ளிக் கல்வி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளன. பிஎஸ்என்எல் செல்போன் சந்தாதாரர்கள் 54373 என்ற எண்ணுக்கு தேர்வு எண்ணை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். செய்தால் தேர்வு முடிவு உடனடியாக தெரிவிக்கப்படும்.

முதலில் HSC என்று ஆங்கிலத்தில் டைப் செய்து ஒரு இடம் விட்டு பின்னர் தேர்வு எண்ணை டைப் செய்து அதை 54373 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்ய வேண்டும்.

மேலும், பிஎஸ்என்எலின் 1250108 என்ற லேண்ட்லைன் எண்ணிலும், 1250108 என்ற மொபைல் எண்ணிலும் தேர்வு முடிவுகளைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment