Monday, July 13, 2009

Thursday, July 9, 2009

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட்

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க

முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட்

திருவாரூர் எஸ்பி பேட்டி

திருவாரூர், ஜூலை 9:
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடற்கரை பகுதியான முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது என்று திருவாரூர் மாவட்ட எஸ்பி பிரவீன் குமார் அபினபு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று காலை நிருபர்களிடம் கூறியது:
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தீவிர ரோந்து பணி நடைபெற்றுவருகிறது. இதையட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடற்கரையோர பகுதியான முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 18கி.மீ தூரம் வரை திருவாரூர் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டில் ஜாம்புவானோடை, கற்பகநாதர் குளம், தம்பிகோட்டை கீழக்காடு உள்ளிட்ட 7 ஊராட்சிகள் உள்ளன. இங்கு கோபால சமுத்திரம், தில்லைவிளாகம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை ஆகிய 4 இடங்களில் நிரந்தரமாக செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விளாங்காடு, கரையாங்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக 2 தற்காலிக செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்களில் கடற்கரையோரங்களில் ரோந்து பணி நடந்து வருகிறது. 9 பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு அனைத்து நவீன ரக ஆயுதங்கள் வழங்கப்பட்டு சிறப்பு அதிரடி படை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக திருவாரூர் மாவட்டத்துக்குள் நுழைய லகூனை கடந்து தான் வரவேண்டும். இங்கு கடல் மார்க்கமாக நுழைய வாய்ப்புகள் குறைவு. இப்பகுதியிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

From :
M.ABDUL MALIK ( SIA )
www.muthupetxpress.blogspot.com

Tuesday, July 7, 2009

சுன‌னுந் ந‌ஸாயீ ந‌பிமொழி நூல் வெளியீடு!!!


சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் நூல் வெளியீடு
சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் சுன‌னுந் ந‌ஸாயீ ( பாக‌ம் ஒன்று ) வெளியீட்டு விழா 04 ஜுலை 2009 ச‌னிக்கிழ‌மை மாலை 5 ம‌ணிக்கு ஃபைஸ் ம‌ஹாலில் வெளியிட‌ர்க‌ள்

Saturday, July 4, 2009

மத்திய அமைச்சருடன் முத்துபேட்டை அதிரைப் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு ஏன்? புதிய தகவல்!


நமதூரின் நலம் கருதியும், வெகு விரைவில் நமதூருக்கு அகல ரயில்பாதை துரிதமாக அமைக்கப்பட்டு செயல்படவும் ஊர்நலனில் அக்கரையுள்ள நமதூர் முக்கியஸ்தர்கள் என்றும் முழு முயற்ச்சியில்தான் இருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் ரயில்வே இணை அமைச்சருமான ஜனாப் இ. அஹமது (கேரளா) அவர்களை

ஜனாப் ஜே.எம். இக்பால் ஹாஜி,
ஏ.ஜெ. அப்துல் ரஜாக் (வக்கீல்) ஹாஜி,
ஜனாப் எம்.எஸ்.தாஜுத்தீன் ஹாஜி,
ஜனாப் ஏ.அப்துல் ரஜாக் ஹாஜி(Chasecom)
ஜனாப் ஏ.ஆர்.அமானுல்லாஹ் ஹாஜி

மற்றும் முத்துபேட்டையைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களும் நேரில் சந்தித்து அகல ரயில்பாதைப் பணியை (தற்போது திருவாரூர் - காரைக்குடிதான், மயிலாடுதுறை திருவாரூர் இணைப்பு முடிந்துவிட்டது) நடப்பாண்டு பட்ஜெட்டில் சேர்க்கவும் கொடுத்தார்கள்!
ஜுலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட் டில்சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சி பயன் தரவில்லை என்றாலும்

அல்லாஹ் அவர்களின் இம்முயற்சிக்கு நல்ல பிரதிபலனையும் அவ்வாறு முயற்சி செய்வதற்காக வெற்றியை வெகுமதியாக வழங்குவானாக!


உங்கள் சேவையை தொடர வேண்டும்...!

Thursday, July 2, 2009

சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் நூல் வெளியீடு


சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் நூல் வெளியீடு
சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் சுன‌னுந் ந‌ஸாயீ ( பாக‌ம் ஒன்று ) வெளியீட்டு விழா 04 ஜுலை 2009 ச‌னிக்கிழ‌மை மாலை 5 ம‌ணிக்கு ஃபைஸ் ம‌ஹாலில் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.
த‌லைசிற‌ந்த‌ மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளும், சான்றோர் பெரும‌க்க‌ளும் சிற‌ப்புரை ஆற்ற‌ இருக்கின்ற‌ன‌ர். இவ்விழாவில் அனைவ‌ரும் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளை குர்ஆன் - ஹ‌தீஸ் த‌மிழாக்க‌ப் ப‌ணியில் ஒரு முன்னோடி நிறுவ‌ன‌மாகும்