அதிமுக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பிடித்து வரும் இந்திய தேசிய லீக் கட்சிக்கும், திமுகவால் தொங்கலில் விடப்பட்ட மனித நேய மக்கள் கட்சிக்கும் ஜெயலலிதா சீட் ஒதுக்கவில்லை.
இதையடுத்து இந்த இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் 2 சீட் கேட்டது தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி. ஆனால், ஒரு சீட் தருகிறோம் என திமுக சொன்னதை ஏற்காமல் அதிமுகவுடன் பேச ஆரம்பித்தது.
இதையடுத்து தனது கூட்டணியில் நெடுங்காலமாக உள்ள இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கிவிட்டு மனித நேயக் கட்சியைப் பற்றி பேசாமலேயே விட்டுவிட்டார் முதல்வர் கருணாநிதி.
இந் நிலையில் இந்தக் கட்சி அதிமுகவிலும் இரண்டு இடங்கள் கேட்டது. ஆனால், அங்கும் இந்தக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படவில்லை.
அதே போல ஜெயலலிதாவை நம்பி நெடுங்காலமா அந்தக் கூட்டணியில் உள்ள இந்திய தேசிய லீக் கட்சியையும் அந்தரத்தில் விட்டுவிட்டது அதிமுக.
இந்தக் கட்சிகள் வேலூர், ராமநாதபுரம், மத்திய சென்னை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு குறி வைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வேலூரில் எல்.கே.எம்.பி. வாசு, மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன், ராமநாதபுரத்தில் சத்தியமூர்த்தி, மத்திய சென்னையில் எஸ்எஸ் சந்திரன் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்திவிட்டார் ஜெயலலிதா.
முஸ்லீம்களுக்கு சீட்டே இல்லை:
மேலும் அதிமுக சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவி்ல்லை. நெல்லை வேட்பாளரான கிருஸ்துவரான சிந்தியா பாண்டியன் மட்டுமே சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
thanks for
அதிரை Express
Tuesday, April 14, 2009
அரசியல் அதிரடி!தனித்து போட்டியிடும் ம ம க வுக்கு சரத்குமார் கட்சி ஆதரவு!!!
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.
தி மு க நெருக்கடி!சிக்கலில் முஸ்லிம் லீக்?
வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் காதர் மொய்தீனை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதால், அவர் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து வேறு வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார்.
காதர் மொய்தீன் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே வேலூர் தொகுதியில்தான் போட்டியிட்டார். அப்போதும் திமுக கூட்டணியில்தான் அவர் இருந்தார். அம்முறை அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டதால் அவரது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் காதர் மொய்தீனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
இந் நிலையில் இதுபோன்ற சர்ச்சை ஏற்படாமல் இருக்க வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்குப் பதில், முஸ்லீம் லீக்கின் ஏணி சின்னத்தில் போட்டியிடுவேன் என காதர் மொய்தீன் கூறியிருந்தார்.
ஆனால் திமுக தரப்பிலோ, ஏணி சின்னத்தில் நின்றால் சுயேச்சை வேட்பாளர் என மக்கள் கருதுவார்கள். சின்னத்தை பிரபலப்படுத்துவது சிரமம். எனவே உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதுதவிர தமிழகம் முழுவதும் சென்று இஸ்லாமியர்களின் வாக்குகளை திரட்ட பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் அவருக்கு திமுக தரப்பு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு காதர் மொய்தீன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று மாலை கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மண்ணடியில் நடக்கிறது. அப்போது யுனானி டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார் அல்லது துபாய் பிரிவு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிரிவு தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகலாம் எனத் தெரிகிறது
Monday, April 13, 2009
’முஸ்லிம்கள் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக..’..
’முஸ்லிம்கள் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக..’... சகோதரரின் வேண்டுகோள் தமிழக முஸ்லிம்களின் மன நிலையை எதிரொளிக்கிறது.. இருக்கின்ற முஸ்லிம்களை தவ்ஹீது - இயக்கம் என்ற பெயரில் கூறு போட்டு..மாற்று இயக்கத்தில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக சக முஸ்லிமுக்கு சலாம் கூற மறுக்கும்-வெறுக்கும் மணப்பாங்கு முஸ்லிம்கள் மத்தியில் வளர காரணமான தலைவர்களும்..இருக்கும் வரை.. தன் கருத்தை ஏற்காதவர்களுக்கு - குழி பறித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் தலைவர்கள் நிறைந்த இந்த சமுதாயத்தை..அத்தகைய தலைவர்களை ’தக்லீது’ செய்யும் ‘தொண்டரடிப்பொடிகளாக’ நமது சமுதாயம் இருக்கும் வரை.. வல்ல இறைவன் எப்படி காப்பாற்றுவான்..? இழந்தது போது..இருக்கின்ற பிரசினைகளுக்கு காரணமான தான் தோன்றி தலைவர்களை புறக்கணீத்து ,.. அவர்களின் சுயநலமிக்க திட்டங்களை - தோலுரித்துக்காட்ட நாம் முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டால் போதும்.. நமது துவாக்களை இறைவன் நிச்சயம் ஏற்பான்.. அரசியல் புறக்கணிப்புக்கு ஆளாகியதும் கருனாநிதியையும், செயலலிதாவையும், ஹிந்துத்வ சக்திகளையும் காரணமாக காட்டுவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.. இந்த இழிநிலைக்கு முழுமையான காரணம் நம்து இயக்கக்ங்களின் கையாளாகாதத் தனம் மட்டும்தான்.. இந்த இழிநிலைக்கு முழுமையான காரணம் நம்து இயக்கக்ங்களின் கையாளாகாதத் தனம் மட்டும்தான்.. இந்த இழிநிலைக்கு முழுமையான காரணம் நம்து இயக்கக்ங்களின் கையாளாகாதத் தனம் மட்டும்தான்..
ஆந்திரா லாட்ஜில் அடைத்து சென்னை பெண்ணை கற்பழித்த போலீஸ்காரர்
சென்னை, ஏப். 10- சென்னை யானை கவுனி ஜெனரல் முத்தையா முதலி தெருவை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 24). இவரது செல்போனுக்கு சில மாதங்களுக்கு முன்பு மிஸ்டு கால் ஒன்று வந்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் மதன்குமார் (27) என்பவர் பேசினார். அதன் மூலம் ஏற்பட்ட பழக்கம் நட்பானது. எல்லை பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணிபுரிவதாக கூறி பத்மாவதியிடம் நெருங்கி பழகினார். சில நாட்களுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட அழைத்து சென்றார். காளகஸ்தியில் உள்ள லாட்ஜில் பத்மாவதியை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தார். மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தார்.
அதை குடித்து பத்மாவதி மயங்கினார். அப்போது அவரை மதன்குமார் கற்பழித்தாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்வதாக கூறி சமாதானம் செய்தார். ஆனால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மதன்குமார் வீடு குரோம்பேட்டையில் உள்ளது. அவர் இங்கிருந்து காஷ்மீருக்கு சென்று விட்டார். எனவே மதன்குமார் மீது நடவடிக்கை எடுத்து அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பத்மாவதி பூக்கடை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதை குடித்து பத்மாவதி மயங்கினார். அப்போது அவரை மதன்குமார் கற்பழித்தாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்வதாக கூறி சமாதானம் செய்தார். ஆனால் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறி திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மதன்குமார் வீடு குரோம்பேட்டையில் உள்ளது. அவர் இங்கிருந்து காஷ்மீருக்கு சென்று விட்டார். எனவே மதன்குமார் மீது நடவடிக்கை எடுத்து அவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பத்மாவதி பூக்கடை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)